நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 3 அக்டோபர், 2012

ஒரு சலனமற்ற நீரோடையாய் 
ஓடிக்கொண்டிருந்தேன்.. 
எங்கிருந்தோ 
காற்றில் பறந்துவந்த 
பூங்கொத்தாய் விழுந்தாய்.. 
சற்றே குதிப்புடன் தொடங்கியது 
என் ஓட்டம்.. 
பார்த்துக்கொண்டிருக்கும்போதே 
வேர் விட்டு வேர் விட்டு 
விருட்சமாய் வளர்கிறாய்..
மெல்ல மெல்ல
நதியை மொத்தமாய் உறிஞ்சி
நதியும் மரமும் நெடிந்து உயர்கிறது..
நான் உனக்குள்ளும்
நீ எனக்குள்ளும்
பிணைந்து பிணைந்து
மறுபடி பூக்கத்தொடங்குகிறோம்..
நதிகளில்லாத தேசத்திலும்..!!!!!!

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

su....per kalakittinga bro.....very romantic....

Unknown சொன்னது…

Thanks Devima..

கருத்துரையிடுக