தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்.... பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
ஞாயிறு, 8 ஏப்ரல், 2012
வாரத்தில்
இரண்டு நாட்கள் விரதத்துடன்
வெள்ளிக்கிழமைகளில்
சுவற்றில் வரைந்த
மஞ்சள் வட்டத்தின் முன்
காமாட்சி விளக்கேற்றி
கடவுளை தேடிக்கொண்டிருக்கிறார் அம்மா...
எல்லா கவலைகளுக்கு மத்தியிலும்
இரவுச்சாப்பாட்டுக்கு பின்
கயிற்றுக்கட்டிலில்
முடங்கும் முன்
நினைவு கூர்கிறார் தந்தை...
இருந்தால் ஏன் வரவில்லை..
என்றும்..
யாராவது அடிபட நேரும்போது
அவர் முன்னாளில்
செய்திருந்த பாவங்களும்
தெரிந்தமையால்..
கண்டிப்பாய் இருப்பார் என்றும்
இரு வேறு மன நிலையில் நான்..
எல்லோருக்கும் விடிகிறது...
யாருக்கும் தெரியாமல்
தூங்கும் போது
பார்த்துச்சென்று விடுகிறார்
கடவுள்......!!!
இரண்டு நாட்கள் விரதத்துடன்
வெள்ளிக்கிழமைகளில்
சுவற்றில் வரைந்த
மஞ்சள் வட்டத்தின் முன்
காமாட்சி விளக்கேற்றி
கடவுளை தேடிக்கொண்டிருக்கிறார் அம்மா...
எல்லா கவலைகளுக்கு மத்தியிலும்
இரவுச்சாப்பாட்டுக்கு பின்
கயிற்றுக்கட்டிலில்
முடங்கும் முன்
நினைவு கூர்கிறார் தந்தை...
இருந்தால் ஏன் வரவில்லை..
என்றும்..
யாராவது அடிபட நேரும்போது
அவர் முன்னாளில்
செய்திருந்த பாவங்களும்
தெரிந்தமையால்..
கண்டிப்பாய் இருப்பார் என்றும்
இரு வேறு மன நிலையில் நான்..
எல்லோருக்கும் விடிகிறது...
யாருக்கும் தெரியாமல்
தூங்கும் போது
பார்த்துச்சென்று விடுகிறார்
கடவுள்......!!!
அம்பரா துணியில்
உறங்கிக்கிடக்கின்றன அம்புகள்
உறங்கிக்கிடக்கின்றன அம்புகள்
ஆணைக்குரிய காலத்தை எதிர்நோக்கி...
எப்போது எழுப்பப்படுவோம்..
மார்பில் பாய வேண்டுமா..,
மரத்தில் பாய வேண்டுமா...
இல்லை இலக்கில்லாமல்
காற்றில் பாய வேண்டுமா..
எதைப்பற்றியும் தெரியாது..!
தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை...
ஏனென்றால்..
முதுகில் சுமந்து திரியும்
வேடனுக்கோ -
வீரனுக்கோ கூட தெரியாது...
இலக்கும் நேரமும்
எப்போது எழுப்பப்படுவோம்..
மார்பில் பாய வேண்டுமா..,
மரத்தில் பாய வேண்டுமா...
இல்லை இலக்கில்லாமல்
காற்றில் பாய வேண்டுமா..
எதைப்பற்றியும் தெரியாது..!
தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை...
ஏனென்றால்..
முதுகில் சுமந்து திரியும்
வேடனுக்கோ -
வீரனுக்கோ கூட தெரியாது...
இலக்கும் நேரமும்
இறைகளாலும்
எதிரிகளாலும்
தீர்மானிக்கப்படுகிறது..!!!
"ஆணைக்குரிய காலத்தை எதிர்நோக்கி... "- இந்த அணிகலனை சேர்த்து இந்த கவிதையை அழகூட்டியவர் எனது முக நூல் நண்பர் திரு அன்பு சிவன் அவர்கள்... அவருக்கு நன்றி...
வியாழன், 5 ஏப்ரல், 2012
சொல்லி இருக்கலாம்...
நீ பேருந்தை தவறவிட்டு
மெல்ல நடந்த நேரத்தில்
எதிர்பாராமல் வந்ததாய்
காட்டிக்கொண்டு
உன்னை அமர வைத்து
சைக்கிள் மிதித்த
மூன்று கிலோமீட்டர் தூரம்
எனக்காய் மட்டுமே இருந்தது ..
அப்போது சொல்லி இருக்கலாம்...!!
உற்சவ மூர்த்தி
ஊருக்குள் வரும்
தேர் திருவிழா அன்று
மாலை வாங்கிவரச்சொல்லி
வழி மரித்தாயே..
அப்போது சொல்லி இருக்கலாம்...!!
உனது தந்தையின் பெயர் சொல்லி
விலாசம் விசாரித்தார்களே..
உன்னை பெண் பார்க்க வந்தவர்கள்...
அன்று சொல்லி இருக்கலாம்..!!!
சாலையோர குடிநீர்க்குழாயில்
என் வருகை அறிந்து
நிறைந்த குடத்தை
கவிழ்த்து விட்டு
இன்னொரு பத்து நிமிடம்
நீட்டித்து நின்றாயே..
அப்போதும் சொல்லி இருக்கலாம்..!!
உன் வருகை தெரியாமல்
சிகரெட்டை வாயில் வைத்து
வளையம் விட
நண்பர்களோடு முயற்சித்த வேளையில்
யாருமறியாமல் முறைத்துச்சென்றாயே..
அப்போது சொல்லி இருக்கலாம்....!!!
ஏதோ கேட்பதற்காய்
என் அம்மா
உன் வீடு வந்த போது
கை பிடித்து "சாப்பிட்டுத்தான் போகணும் அத்தை"
என உரிமையோடு நிறுத்தி
இலை அறுக்க ஓடினாயாமே..
அன்றாவது சொல்லி இருக்கலாம்..!!
இப்போது என் கவிதைகளை
எங்காவது நீ படிக்க நேர்ந்து விடுமோ
என அஞ்சுகையில் தோன்றுகிறது...
என் வலியை என்னுள் புதைத்து
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்...!!
நீ பேருந்தை தவறவிட்டு
மெல்ல நடந்த நேரத்தில்
எதிர்பாராமல் வந்ததாய்
காட்டிக்கொண்டு
உன்னை அமர வைத்து
சைக்கிள் மிதித்த
மூன்று கிலோமீட்டர் தூரம்
எனக்காய் மட்டுமே இருந்தது ..
அப்போது சொல்லி இருக்கலாம்...!!
உற்சவ மூர்த்தி
ஊருக்குள் வரும்
தேர் திருவிழா அன்று
மாலை வாங்கிவரச்சொல்லி
வழி மரித்தாயே..
அப்போது சொல்லி இருக்கலாம்...!!
உனது தந்தையின் பெயர் சொல்லி
விலாசம் விசாரித்தார்களே..
உன்னை பெண் பார்க்க வந்தவர்கள்...
அன்று சொல்லி இருக்கலாம்..!!!
சாலையோர குடிநீர்க்குழாயில்
என் வருகை அறிந்து
நிறைந்த குடத்தை
கவிழ்த்து விட்டு
இன்னொரு பத்து நிமிடம்
நீட்டித்து நின்றாயே..
அப்போதும் சொல்லி இருக்கலாம்..!!
உன் வருகை தெரியாமல்
சிகரெட்டை வாயில் வைத்து
வளையம் விட
நண்பர்களோடு முயற்சித்த வேளையில்
யாருமறியாமல் முறைத்துச்சென்றாயே..
அப்போது சொல்லி இருக்கலாம்....!!!
ஏதோ கேட்பதற்காய்
என் அம்மா
உன் வீடு வந்த போது
கை பிடித்து "சாப்பிட்டுத்தான் போகணும் அத்தை"
என உரிமையோடு நிறுத்தி
இலை அறுக்க ஓடினாயாமே..
அன்றாவது சொல்லி இருக்கலாம்..!!
இப்போது என் கவிதைகளை
எங்காவது நீ படிக்க நேர்ந்து விடுமோ
என அஞ்சுகையில் தோன்றுகிறது...
என் வலியை என்னுள் புதைத்து
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்...!!
ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
வெற்றுக்காகித பக்கங்களுடன்
கிடைத்த வாழ்க்கை புத்தகம்..!!!
சில பக்கங்கள் என்னாலும்
பல பக்கங்கள் யாரோவாலும்...
நான் விரும்பியதை எழுத
என்னாலும் இயலவில்லை..
என் விருப்பம் அறிய
இதுவரை எழுதிய யாரும்
தயாராகவுமில்லை..
இன்னும் எவ்வளவு பக்கங்கள் .?
எழுதப்போவது நானா..
வேறு யாருமா..
தெரியாது..
பக்கங்கள் புரண்டுகொண்டே இருக்கிறது.!!!.
கிடைத்த வாழ்க்கை புத்தகம்..!!!
சில பக்கங்கள் என்னாலும்
பல பக்கங்கள் யாரோவாலும்...
நான் விரும்பியதை எழுத
என்னாலும் இயலவில்லை..
என் விருப்பம் அறிய
இதுவரை எழுதிய யாரும்
தயாராகவுமில்லை..
இன்னும் எவ்வளவு பக்கங்கள் .?
எழுதப்போவது நானா..
வேறு யாருமா..
தெரியாது..
பக்கங்கள் புரண்டுகொண்டே இருக்கிறது.!!!.