தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்.... பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
புதன், 26 செப்டம்பர், 2012
விஸ்வாமித்திரன்
தவமிருக்கிறான்...
மேனகை வேண்டி...!!!
காதல் சுகமானது..!!!
விலக விலக என்னுள் நீ
விஸ்வரூபமெடுக்கிறாய்..
நெருங்க நெருங்க
உன்னுள் நான்
தொலைந்து போகிறேன்..!!!
நீயா நானா என்ற போராட்டம்
நிறையபேரை பிரிக்கிறது..
ஆனால் நம்மை மட்டும்
நெருக்கி பிணைக்கிறது...
ஆம்...
யார் அதிகமாய் காதலிப்பது..
நீயா நானா என்ற போராட்டம்..!!!
நீ என்னை
அணைத்துக்கொண்டது என்னவோ
நிமிடங்களில் தான்...
ஆனால் அந்த நினைவுகள்
என் ஆயுளை வருடங்களாய் நீட்டிக்கிறது...!!!
தவமிருக்கிறான்...
மேனகை வேண்டி...!!!
காதல் சுகமானது..!!!
விலக விலக என்னுள் நீ
விஸ்வரூபமெடுக்கிறாய்..
நெருங்க நெருங்க
உன்னுள் நான்
தொலைந்து போகிறேன்..!!!
நீயா நானா என்ற போராட்டம்
நிறையபேரை பிரிக்கிறது..
ஆனால் நம்மை மட்டும்
நெருக்கி பிணைக்கிறது...
ஆம்...
யார் அதிகமாய் காதலிப்பது..
நீயா நானா என்ற போராட்டம்..!!!
நீ என்னை
அணைத்துக்கொண்டது என்னவோ
நிமிடங்களில் தான்...
ஆனால் அந்த நினைவுகள்
என் ஆயுளை வருடங்களாய் நீட்டிக்கிறது...!!!
புதன், 12 செப்டம்பர், 2012
துண்டு துண்டாய் ஒரு வானம்..
மல்லிகை வாசம்
கிளர்ச்சி ஏற்படுத்தும்
படித்து தெரிந்தது....
ரோஜாவாசம்
ரோஜாவாசம்
கிளர்ச்சி ஏற்படுத்துகிறது....
பட்டு தெரிந்தது...
காரணம் ...நீ..!!!
காரணம் ...நீ..!!!
துண்டு துண்டாய் ஒரு வானம்..
"செல்லம்...
செல்லம்..."
சீரான இடைவெளியில்
நான் அழைக்கும் போதே
தெரியுமுனக்கு..
நான் என்ன சொல்ல போகிறேனென்று...
"I LOVE YOU DA .."
"ம்..."
செல்லம்..."
சீரான இடைவெளியில்
நான் அழைக்கும் போதே
தெரியுமுனக்கு..
நான் என்ன சொல்ல போகிறேனென்று...
"I LOVE YOU DA .."
"ம்..."
I LOVE YOU TOO
பதினோர் எழுத்து பதிலை
ஒற்றை எழுத்தாய்
சுருக்குகிராய்..
வார்த்தைகளை
எழுத்துக்குள்ளும் ..
என்னை உனக்குள்ளும்
அடக்குவதில் சுகம் உனக்கு..
அடங்குவதில் சுகம்
எங்களுக்கு..
பதினோர் எழுத்து பதிலை
ஒற்றை எழுத்தாய்
சுருக்குகிராய்..
வார்த்தைகளை
எழுத்துக்குள்ளும் ..
என்னை உனக்குள்ளும்
அடக்குவதில் சுகம் உனக்கு..
அடங்குவதில் சுகம்
எங்களுக்கு..
துண்டு துண்டாய் ஒரு வானம்..
உப்புக்காற்றில் ஊடுருவி
உப்புக்காற்றில் ஊடுருவி
காதுநுழைந்து ..
உயிருக்குள்
ஊர்வலம் நடத்துகிறாய் நீ...
நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்....
உனக்கு முன்னால் நானும்..
எனக்கு முன்னால் நீயுமர்ந்து
பரஸ்பரம் ரசித்துக்கொண்டிருக்கிறோம்..
வார்த்தைகளற்று மௌனமாய்...!!
புதன், 5 செப்டம்பர், 2012
காகிதம்
காற்றில் பறந்து ஓடுகிறது..
பேனாவில்
மை தீர்ந்து பல்லிளிக்கிறது..
பென்சில் முனை
உடைந்து சிதறுகிறது..
ஆனாலும் எழுதுவோம்..
எழுதுகோலாய் எம் விரல்கள்..
காகிதமாய் பூமிப்பரப்பு..
இடையில் நிறுத்த
காற்றில் பறந்து ஓடுகிறது..
பேனாவில்
மை தீர்ந்து பல்லிளிக்கிறது..
பென்சில் முனை
உடைந்து சிதறுகிறது..
ஆனாலும் எழுதுவோம்..
எழுதுகோலாய் எம் விரல்கள்..
காகிதமாய் பூமிப்பரப்பு..
இடையில் நிறுத்த
இரண்டே காரணங்கள்தான் வேண்டும்..
ஒன்று எம் விரல்கள் ஓய வேண்டும்..
இல்லை
பூமி சுற்றுவதை நிறுத்தவேண்டும்!!!.
ஒன்று எம் விரல்கள் ஓய வேண்டும்..
இல்லை
பூமி சுற்றுவதை நிறுத்தவேண்டும்!!!.
பட்டாம்பூச்சியை
அலகிடை கவ்வி
சாரளத்தின் வழி நுழைந்து
கீற்றுக்குடிசையின்
மோட்டிலிருந்து தொங்கும்
கயிற்றில் கட்டிய சிறு கூடுநோக்கி
விர்ர்ரென சிறகடிக்கும்
சிட்டுக்குருவியாய்
பறந்து வருகிறது மனசு..
உன்னை பார்த்த சந்தோஷத்தில்..
வேகமாய் கடந்து சென்ற
வாகனமேற்படுத்தும்
வெற்றிடம் நிரப்ப
காற்றோடு சேர்ந்து
ஓடிவரும்
குப்பைகளாய்
கூடவே காமமும்..!!!
அலகிடை கவ்வி
சாரளத்தின் வழி நுழைந்து
கீற்றுக்குடிசையின்
மோட்டிலிருந்து தொங்கும்
கயிற்றில் கட்டிய சிறு கூடுநோக்கி
விர்ர்ரென சிறகடிக்கும்
சிட்டுக்குருவியாய்
பறந்து வருகிறது மனசு..
உன்னை பார்த்த சந்தோஷத்தில்..
வேகமாய் கடந்து சென்ற
வாகனமேற்படுத்தும்
வெற்றிடம் நிரப்ப
காற்றோடு சேர்ந்து
ஓடிவரும்
குப்பைகளாய்
கூடவே காமமும்..!!!
சனி, 1 செப்டம்பர், 2012
தவற விட்ட அழைப்புகள்
ஒவ்வொரு நேரத்திற்கும்
ஒவ்வொரு கேள்வியை சுமந்து வருகின்றன..
விடிகாலையில் ..
"இன்னும் தூங்குறீங்களா.."
உச்சி வெயிலில் " சாப்டீங்களா..? "
மாலை பொழுதில்..
"ரூம்க்கு போயாச்சா..."
ஊரடங்கும் வேளையில் ...
"தூக்கம் வரலடா.."
தவறவிட்ட அழைப்புகள்
தாங்கி வரும்
ஒவ்வொரு கேள்விக்கும்
அதே தவறவிட சொல்லிக்கொடுக்கப்பட்ட
அழைப்புகளாலேயே
பதிலும் சொல்ல பழகி இருக்கிறோம்..
மிஸ்டு கால்களால்
மிஸ்ஸான வாழ்க்கையை
வாழ்ந்து விடும் வெறி
கண்களில் நிலழாட
தூங்கிப்போகிறோம்..
விடியட்டும்,...
இன்னொரு மிஸ்டு கால் வரும்..!!!