நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 20 அக்டோபர், 2012

தெரிந்தவர்களின் 
திருமண ஆல்பம் 
பார்க்க நேரும்போதெல்லாம் 
கற்பனை செய்ய 
முயன்றிருக்கிறேன்.. 
எனக்கான ஆல்பத்தில் 
எனக்கு 
பக்கத்தில் இருப்பவளின் முகத்தை.. 
தினசரி தெருவில் சந்திக்கும் 
அத்தை பெண் மாதிரி...
எனக்கு இரண்டாம் வகுப்பில்
பாடம் சொல்லித்தந்த டீச்சர் மாதிரி...
டி வி சீரியலில்
பாந்தமாய் நடிக்கும் நடிகை மாதிரி..
வெள்ளித்திரையில் கண் சிமிட்டும்
நான் ரசிக்கும் கதாநாயகிகள் மாதிரி..
திருமண ஆல்பம்
கையில் கிடைத்தபின் முடிவு செய்தேன்..
தேவதையை
கற்பனை செய்ய முடியாதென்பதை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக