நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 25 ஜூன், 2012

வார்த்தைகளில் 
சொல்ல இயலாத 
ஒரு ப்ரிய மௌனம் 
புதைத்திருக்கிறது நம்மை... 
சில சத்தமில்லாத புன்னகையாய் 
அவ்வப்போது முளை விடுகிறது 
நம் காதல்..!!!

தேடல்களில் தொலைந்துவிட 
தொடர்கிறது நம் தேடல்கள்.. 
ஆனால்..
 தொலைக்க இயலாதபடி 
 ஊடுருவும் பார்வைகள் 
காட்டிக்கொடுத்துவிடுகிறது நம்மை..!!
உன்னை மட்டும் 
சந்திக்காமல் போயிருந்தால் 
நிச்சயம் எனக்கு 
மாலை மரியாதை எல்லாம் 
கிடைத்திருக்கும்.. 
மேடையில் ஏற்றியோ... 
இல்லை...
தலைமாட்டில் 
அகல் விளக்கு ஏற்றியோ...!!
உன்னை 
விபரம் தெரிந்தவளாய் ஆக்கவே 
நான் சிந்திப்பதை 
நிறுத்தி விட்டேன்... 
உன்னை விலகி விடாதிருக்க 
என் கோபங்களை 
விலக்கி விட்டேன்.... 
உன்னில் கலந்துவிட்டு 
தற்கொலையை தவிர்த்துவிட்டேன்.. 
உன்னை மட்டும் 
சந்திக்காமலிருந்திருந்தால்.. 
என் சிந்தனைகள் 
என்னை மேடையிலேற்றி  
இருக்கலாம்.. 
என் கோபங்கள் 
ஒரு தற்கொலைக்கோ 
கொலையாகவோ தூண்டி இருக்கலாம்...  
ஆனாலும் 
இந்த சராசரி வாழ்க்கை 
நகர்கிறது.. 
உன்னுடன்.. 
உன்னில் கலந்து.. 
உன்னில் கரைந்து..!!!