வார்த்தைகளில்
சொல்ல இயலாத
ஒரு ப்ரிய மௌனம்
புதைத்திருக்கிறது நம்மை...
சில சத்தமில்லாத புன்னகையாய்
அவ்வப்போது முளை விடுகிறது
நம் காதல்..!!!
தேடல்களில் தொலைந்துவிட
தொடர்கிறது நம் தேடல்கள்..
ஆனால்..
தொலைக்க இயலாதபடி
ஊடுருவும் பார்வைகள்
காட்டிக்கொடுத்துவிடுகிறது நம்மை..!!