நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 17 அக்டோபர், 2012

நண்பர்கள்.. 
சக ஊழியர்கள்.. 
வழியில் சந்திப்பவர்கள்.. 
பல சரக்கு கடைக்காரர்கள்.. 
எல்லோருக்காகவும் 
புன்னகைகளை உதிர்கிறேன்.. 
சில அடி மனதிலிருந்து.. 
சில மேலுதட்டிலிருந்து.. 
சில காரியத்தோடு.. 
சில வெட்டியாய்... 
ஆனால்.. உனக்கான புன்னகை மட்டும்
உண்டியலில் சேகரிக்கும்
சில்லரைக்காசாய் சேர்க்கப்படுகிறது..
காத்திருக்கிறேன்..
அந்த புனித யாத்திரைக்கு..
நேர்த்திக்கடனை விரைவில் முடிக்க..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக