தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்.... பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
ஞாயிறு, 20 மே, 2012
கனவில் வந்தேனேன்றாய்..
நம்பவில்லை நான்..
அதே நாள்
அதே நேரம்
என்னுடனிருந்தாய் நீ ..
பிறகெப்படி நான் அங்கு வந்தேன்..
குழப்பத்தினூடே பிரிகிறோம்..
ஏனடி நேற்று பொய் சொன்னாய்..
என்ன பொய்..
உன் கனவில் நான் வந்ததாய்..
ஓ.. நான் வந்தது அவளுக்கு தெரியாது..
என்ன குழப்புகிறாய்..
அவள் என்னை
மறைந்திருக்கச்சொன்னாள்..
தெரியாமல்தான் நான் வந்தேன்..
எனக்கு இப்பொது புரிகிறது..
வந்திருப்பது நீ அல்ல..
உன் காதல் என்று..
ஆமாம்....
நேற்று என்னோடு சரியாய் பேசவில்லையே..
இன்னுமா புரியவில்லை..
எனக்கு தெரியாமல்
அது உன்னை தேடித்தான்
அங்கு போயிருக்கும்..
மார்பில் முகம் புதைக்கிறாய்..
சுருக்கென்ற வலியுடன்
உன் இதழிடை
பற்களிலிருந்து முளைக்கிறது
ஒற்றை முடி...!!!
நம்பவில்லை நான்..
அதே நாள்
அதே நேரம்
என்னுடனிருந்தாய் நீ ..
பிறகெப்படி நான் அங்கு வந்தேன்..
குழப்பத்தினூடே பிரிகிறோம்..
ஏனடி நேற்று பொய் சொன்னாய்..
என்ன பொய்..
உன் கனவில் நான் வந்ததாய்..
ஓ.. நான் வந்தது அவளுக்கு தெரியாது..
என்ன குழப்புகிறாய்..
அவள் என்னை
மறைந்திருக்கச்சொன்னாள்..
தெரியாமல்தான் நான் வந்தேன்..
எனக்கு இப்பொது புரிகிறது..
வந்திருப்பது நீ அல்ல..
உன் காதல் என்று..
ஆமாம்....
நேற்று என்னோடு சரியாய் பேசவில்லையே..
இன்னுமா புரியவில்லை..
எனக்கு தெரியாமல்
அது உன்னை தேடித்தான்
அங்கு போயிருக்கும்..
மார்பில் முகம் புதைக்கிறாய்..
சுருக்கென்ற வலியுடன்
உன் இதழிடை
பற்களிலிருந்து முளைக்கிறது
ஒற்றை முடி...!!!
ஞாயிறு, 13 மே, 2012
இரண்டு எழுத்தோ
மூன்று எழுத்தோ தான் இருக்கும்..
எப்படி முயற்சித்தும்
எழுதிவிட முடியவில்லை
உன் முத்தத்தையும்..
உனக்கான முத்தத்தையும்...
சில முத்தங்கள்
சரியாய் கவனிக்கும் முன்
சட்டென முடிந்து விடுகிறது..
சத்தத்துடன்..
நிதானமான முத்தங்களோ
சத்தமில்லாமல் தொடர்கிறது...
அதையும் மீறி
எழுதிவிடும் நோக்கோடு
இன்னொரு முறை முயன்றாலோ..
பேனா பேப்பரோடு
என்னையும் தொலைத்துவிட்டு
தேட வேண்டி இருக்கிறது...
உடல் முழுதும்
உதடுகள் நடத்தும்
ஊர்வல முத்தங்களோ
உஷ்ணக்காற்றாய் மட்டுமே
உணர முடிகிறது..
எப்படியும் எழுதி விடலாம்..
இரண்டேழுதோ
மூன்றேழுத்தோ தானே...
அதுவரை தொடரட்டும்
உன் முத்தங்களும்..
உனக்கான முத்தங்களும்...!!!
மூன்று எழுத்தோ தான் இருக்கும்..
எப்படி முயற்சித்தும்
எழுதிவிட முடியவில்லை
உன் முத்தத்தையும்..
உனக்கான முத்தத்தையும்...
சில முத்தங்கள்
சரியாய் கவனிக்கும் முன்
சட்டென முடிந்து விடுகிறது..
சத்தத்துடன்..
நிதானமான முத்தங்களோ
சத்தமில்லாமல் தொடர்கிறது...
அதையும் மீறி
எழுதிவிடும் நோக்கோடு
இன்னொரு முறை முயன்றாலோ..
பேனா பேப்பரோடு
என்னையும் தொலைத்துவிட்டு
தேட வேண்டி இருக்கிறது...
உடல் முழுதும்
உதடுகள் நடத்தும்
ஊர்வல முத்தங்களோ
உஷ்ணக்காற்றாய் மட்டுமே
உணர முடிகிறது..
எப்படியும் எழுதி விடலாம்..
இரண்டேழுதோ
மூன்றேழுத்தோ தானே...
அதுவரை தொடரட்டும்
உன் முத்தங்களும்..
உனக்கான முத்தங்களும்...!!!