தீர்ந்து கொண்டே இருக்கிறது.. பேனா மையும் காகிதமும்.... பெருகிக்கொண்டே இருக்கிறது உன் மீதான என் காதல்..!!!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!
செவ்வாய், 31 ஜனவரி, 2012
வருத்தப்படுகிறாள் அம்மு...
"நீங்க நிறைய எழுதிட்ரீங்கபா....
எனக்கு தான் சொல்ல கூட தெரியல..."
அடி மண்டு.. எனக்காக சாப்பிடாம இருக்கியே..
இத விட எப்படி சொல்ல முடியும்..?
பின்கூந்தலில் விரல்கள் அலைய
சமாதானம் சொல்கிறேன்..
இதழ்களில் முத்தமிட்டு மார்பில் முகம் புதைக்கிறாய்..
இப்போது எனக்கு வருத்தம்..
இப்படி எளிதாய் சொல்லிவிடும் நேர்த்தி
எனக்கு ஏன் வாய்க்கவில்லை..!!!
"நீங்க நிறைய எழுதிட்ரீங்கபா....
எனக்கு தான் சொல்ல கூட தெரியல..."
அடி மண்டு.. எனக்காக சாப்பிடாம இருக்கியே..
இத விட எப்படி சொல்ல முடியும்..?
பின்கூந்தலில் விரல்கள் அலைய
சமாதானம் சொல்கிறேன்..
இதழ்களில் முத்தமிட்டு மார்பில் முகம் புதைக்கிறாய்..
இப்போது எனக்கு வருத்தம்..
இப்படி எளிதாய் சொல்லிவிடும் நேர்த்தி
எனக்கு ஏன் வாய்க்கவில்லை..!!!
அவசரமாய் பேருந்தில் தொற்றுகிறாய்...
"முன்னாடியே வந்து நிக்கறதில்லையா."
ஒரு கை பாதுகாப்பாய் பிடிக்குமே......அது...
மழையில் நனைந்து வீடு திரும்புகிறாய்..
எங்காவது நின்னுட்டு மழை விட்ட பிறகு வந்திருக்கலாம்ல..
கையில் துண்டுடன் ஒரு கை தயாராய் இருக்குமே.. அது..
சாப்பிடும் போது புரைக்கேறினால்..
தலையில் தட்டி தண்ணீர் நீட்டுமே ஒரு கை.. அது..
தூக்கம் வராமல்
புரண்டு கொண்டிருக்கும் இரவுகளில்
தலை கோதி கால் பிடித்து தூங்கச்செய்யுமே ஒரு கை.. அது..
எல்லா கைகளுக்கும் ஒரு உருவம் கொடுத்துப்பார்...
அப்போது புரியும்.. அது கை அல்ல.. என் காதல் என்று...!!!
"முன்னாடியே வந்து நிக்கறதில்லையா."
ஒரு கை பாதுகாப்பாய் பிடிக்குமே......அது...
மழையில் நனைந்து வீடு திரும்புகிறாய்..
எங்காவது நின்னுட்டு மழை விட்ட பிறகு வந்திருக்கலாம்ல..
கையில் துண்டுடன் ஒரு கை தயாராய் இருக்குமே.. அது..
சாப்பிடும் போது புரைக்கேறினால்..
தலையில் தட்டி தண்ணீர் நீட்டுமே ஒரு கை.. அது..
தூக்கம் வராமல்
புரண்டு கொண்டிருக்கும் இரவுகளில்
தலை கோதி கால் பிடித்து தூங்கச்செய்யுமே ஒரு கை.. அது..
எல்லா கைகளுக்கும் ஒரு உருவம் கொடுத்துப்பார்...
அப்போது புரியும்.. அது கை அல்ல.. என் காதல் என்று...!!!
நானொரு நாட்டுப்புற ரசிகன்... !!
நானொரு
நாட்டுப்புற
ரசிகன்...
ஓவியம் வரைகையில்
தடுக்கி கொட்டி விட்ட
வர்ணங்களை
தூரிகையால்
கலைத்து விட்டிருக்கும்
நவீன ஓவியங்கள்
எனக்கு புரியாது...
ஆண் பெண் குறிகளையும்
புணர்தலையும்
நேரடியாய் சொல்லிவிட்டு
இலக்கியமென
சூளுரைக்கும்
நவீன கவிதைகள்
எனக்கு புரிவதில்லை...
இதனைப்பார்த்து
இலக்கிய வியாதிகள்
நகைக்கக்கூடும்...
நகைக்கட்டுமே...
புரியாததை புரிவதாய்
என்னை நானே ஏமாற்றி
கைதட்டுவதை விட
நானொரு
நாட்டுப்புற ரசிகனாகவே
இருந்து விட்டு
போகிறேன்...
எனக்கான கவிதைகள்
எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கும்...
வானம்..
நிலா...
காற்று..
கடல்...
குதிரை என்று...!!!
நாட்டுப்புற
ரசிகன்...
ஓவியம் வரைகையில்
தடுக்கி கொட்டி விட்ட
வர்ணங்களை
தூரிகையால்
கலைத்து விட்டிருக்கும்
நவீன ஓவியங்கள்
எனக்கு புரியாது...
ஆண் பெண் குறிகளையும்
புணர்தலையும்
நேரடியாய் சொல்லிவிட்டு
இலக்கியமென
சூளுரைக்கும்
நவீன கவிதைகள்
எனக்கு புரிவதில்லை...
இதனைப்பார்த்து
இலக்கிய வியாதிகள்
நகைக்கக்கூடும்...
நகைக்கட்டுமே...
புரியாததை புரிவதாய்
என்னை நானே ஏமாற்றி
கைதட்டுவதை விட
நானொரு
நாட்டுப்புற ரசிகனாகவே
இருந்து விட்டு
போகிறேன்...
எனக்கான கவிதைகள்
எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கும்...
வானம்..
நிலா...
காற்று..
கடல்...
குதிரை என்று...!!!