நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 21 ஏப்ரல், 2012

குட்டிச்சுவற்றின்மீது 
முன்கால்களை ஊன்றி 
எட்டியவரை நாக்கை நீட்டி 
பறித்துவிட முயற்சிக்கிறது.. 
இளம் தளிரை...!! 
காற்று அதை காப்பாற்றும் முனைப்போடு
நாக்கின் தொடுகையிலிருந்து
நகர்த்த முனைகிறது...
ஆடு இன்னொரு இலைதேடி நகருமா..
இல்லை, காற்று அசரும் நேரத்தில் கவ்வி விடுமா...
தொடர்கிறது வாழ்விற்கான போராட்டம்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக