அம்பரா துணியில்
உறங்கிக்கிடக்கின்றன அம்புகள்
உறங்கிக்கிடக்கின்றன அம்புகள்
ஆணைக்குரிய காலத்தை எதிர்நோக்கி...
எப்போது எழுப்பப்படுவோம்..
மார்பில் பாய வேண்டுமா..,
மரத்தில் பாய வேண்டுமா...
இல்லை இலக்கில்லாமல்
காற்றில் பாய வேண்டுமா..
எதைப்பற்றியும் தெரியாது..!
தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை...
ஏனென்றால்..
முதுகில் சுமந்து திரியும்
வேடனுக்கோ -
வீரனுக்கோ கூட தெரியாது...
இலக்கும் நேரமும்
எப்போது எழுப்பப்படுவோம்..
மார்பில் பாய வேண்டுமா..,
மரத்தில் பாய வேண்டுமா...
இல்லை இலக்கில்லாமல்
காற்றில் பாய வேண்டுமா..
எதைப்பற்றியும் தெரியாது..!
தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை...
ஏனென்றால்..
முதுகில் சுமந்து திரியும்
வேடனுக்கோ -
வீரனுக்கோ கூட தெரியாது...
இலக்கும் நேரமும்
இறைகளாலும்
எதிரிகளாலும்
தீர்மானிக்கப்படுகிறது..!!!
"ஆணைக்குரிய காலத்தை எதிர்நோக்கி... "- இந்த அணிகலனை சேர்த்து இந்த கவிதையை அழகூட்டியவர் எனது முக நூல் நண்பர் திரு அன்பு சிவன் அவர்கள்... அவருக்கு நன்றி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக