நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

கோயில் குளத்தின் 
கீழ் கரையில் 
சில உடைந்த 
ஒற்றை உபயோக 
நெகிழி குவளைகள்.. 
சிதறியிருந்த
சில முறுக்குத் துண்டுகளும்
உடைந்த பாதி கடலை பருப்பும்..
பாட்டில்கள் எதையும் காணவில்லை..
ஆனாலும்
அவைகள் சொன்ன சேதி
யாரோ பிறந்திருக்கிறார்கள்.. நேற்றிரவு...
சில அழிவுகளை நினைவு கூர்ந்து..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக