நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 5 ஏப்ரல், 2012

தோளில் தூக்கிய தந்தையிடம் 
நானே நடப்பதாய் சொல்லி 
இறங்கினேன்,,, 
அவர் என்கையை பிடித்த போது 
அவரின் விரல்களை 
நானே பிடித்துக்கொள்வதாய் சொன்னேன்...
அவர் பிடியில் இருந்திருந்தால்
அத்தனை சீக்கிரம்
நழுவ விட்டிருக்க மாட்டார்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக