நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 5 ஏப்ரல், 2012

நீ அருகிலிருக்கும் வரை 
நானும் நம்பியதில்லை 
எனக்கு கவிதை எழுத வருமென்று.. 
நீ விலகிய நாழிகை முதல் 
சிலிர்த்தெழும் வார்த்தைகள்
கவிதையாய் உதிர்கையில் தெரிகிறது.
நீ அருகிலிருக்கும் தைரியத்தில்
அவைகள் என்னுள்
உறங்கிக் கிடந்திருப்பது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக