நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

வாரத்தில் 
இரண்டு நாட்கள் விரதத்துடன் 
வெள்ளிக்கிழமைகளில் 
சுவற்றில் வரைந்த 
மஞ்சள் வட்டத்தின் முன் 
காமாட்சி விளக்கேற்றி
கடவுளை தேடிக்கொண்டிருக்கிறார் அம்மா...
எல்லா கவலைகளுக்கு மத்தியிலும்
இரவுச்சாப்பாட்டுக்கு பின்
கயிற்றுக்கட்டிலில்
முடங்கும் முன்
நினைவு கூர்கிறார் தந்தை...
இருந்தால் ஏன் வரவில்லை..
என்றும்..
யாராவது அடிபட நேரும்போது
அவர் முன்னாளில்
செய்திருந்த பாவங்களும்
தெரிந்தமையால்..
கண்டிப்பாய் இருப்பார் என்றும்
இரு வேறு மன நிலையில் நான்..
எல்லோருக்கும் விடிகிறது...
யாருக்கும் தெரியாமல்
தூங்கும் போது
பார்த்துச்சென்று விடுகிறார்
கடவுள்......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக