நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

நிர்வாணம் 
எதற்கும் 
கவலைப்படுவதில்லை... 
ஆடைகள்தான் 
அதிகம் 
அலட்டிக்கொள்கின்றன...
சில நேரங்களில்
தாம் தான் பாதுகாப்பதாய்...
சில நேரங்களில்
தன்னுடைய அடிமையென...
சில நேரங்களில்
தன்னை விட
அதிக அக்கறைகொள்வோர்
யாருமில்லை என..
இன்னும் எப்படியெல்லாமோ...
ஆனால்..
நிர்வாணம்
கடைசிவரை
நிர்வாணமாகவே இருக்கிறது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக