நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நான்... அவள்...
அண்ட வெளியின் எல்லையில்லா இருள்..
அக்குள் வியர்வை நுகர்வில்
ஆக்ரோஷமாய் கிளர்த்தெழும் காமம்...
சீறிப்பாயும் ஜல்லிக்கட்டுக்காளையை
கால் அகட்டி அடக்கும் லாவகம்..
மெல்ல..மெல்...மெ... ....
நானும் வார்த்தையும் ஒற்றை கொம்புடன்
அவளிலும் 
என்னிலும்.. மாறி மாறி கரைந்து கரைந்து...
...... .............. ................ .............. ....
காத்திருக்கிறது..
என் பஞ்சகல்யானிக்குதிரையும்
அலுமினிய தூக்கில் சோறும்
உரிக்கலையத்தில் மோரும்
உரித்த வெங்காயமும்
எங்களை மீட்டெடுத்துவர...
ஒரு சேவலின் கூவலுக்கு...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக