நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 22 பிப்ரவரி, 2012

விலை மகளான விளைமகள்...

ஆசைப்பட்டதென்னவோ 
இரவா வாழ்க்கை 
கிடைத்ததென்னவோ... 
இரவு வாழ்க்கை...

தூக்கம் மறுக்கப்பட்டதால்
கல்யாணம் பற்றிய
கனவுகள் கூட வருவதில்லை...
ஆனாலும்
எல்லா இரவும் முதலிரவுதான்

கடவுள் கூட
எங்களை
கண்டுகொள்வதில்லை...
அப்படித்தான் நினைக்கிறேன்..
ஒருவேளை அவரும்கூட
மாறுவேடத்தில்
வந்திருக்க கூடும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக