நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 22 பிப்ரவரி, 2012


உயிர்த்தெழுந்த
பெண்மை
உறங்கிக்கிடந்த
ஆண்மையை
தின்றுவிட்டதால்
'வாய்' மையும்
'கண்' மையும்
எங்கள் வசமானது..
கூந்தலோடு சேர்த்து
கொங்கையும் வளர்த்தோம்..
ஆனாலும்
திரு நங்கைகளாய்த்தான்
ஆகமுடிந்தது..
ஏனோ தெரியவில்லை..
எங்களால்
திருமதி நங்கைகளாய்
ஆக முடியவே இல்லை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக