நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பல யுகங்கள் கடந்த 
நெடிய தவத்தின் 
வெம்மை தாங்காமல் 
கடவுள் என் முன் 
பிரசன்னமானார்... 
என்ன வேண்டும்.. 
சீக்கிரம் கேள்..
எனக்கு 
நிறைய வேலை இருக்கிறது..!! 
ஒ கடவுளே.... 
பெரிதாய் ஒன்றுமில்லை.. 
என் மரணம் 
எனக்கு வலிக்க கூடாது... 
எல்லோருக்கும் 
வலிக்க வேண்டும்.. ... 
இதற்கு ஏன் 
என்னை அழைத்தாய்... ?? 
காதலி.. 
காதலித்துக்கொண்டே இரு.. 
என் எல்லா படைப்புகளையும் 
எதிர்பார்ப்பில்லாமல் காதலி.. 
உன் மரணம் 
நிச்சயமாய் 
எனக்கும் கூட வலிக்கும்..!!!

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமை செந்தில்..:)

Unknown சொன்னது…

Thanks Thenammai

கருத்துரையிடுக