நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

முன்போல் நீ 
கதவு மறைவில் 
காத்திருப்பதில்லை... 


சமையலறையில் 
பூனைமாதிரி 
பின்னாலிருந்து
அணைக்கும் இதமில்லை..
பெற்றோருக்கும்
பிள்ளைகளுக்கும்
தெரியாமல் 
சத்தமில்லாமல்  கொடுக்கும்
ஈரம் நிறைந்த
ரகசிய  முத்தங்களில்லை...
என் பற்களால் 
உன் கன்னங்களில்  வரிகள் பதித்த
கன்னக்கதுப்புக்களில்
முதுமை
வரைந்திருக்கிறது வரிகளை...
ஆனாலும்
பத்தாயக்கொட்டகையின்
கயிற்றுக்கட்டிலில்
இருமலினூடே
" கிழவன் சாப்பிட்டாரா" என
மருமகளிடம் வினவும்
உன் குரல்
காதுகளில் ஊடுருவும்
வேளைகளில் 
கிளர்த்தேல்ழும் காதலினூடே 
தோன்றுகிறது ....
உன்னோடு வாழ
இன்னொரு ஜென்மம்
கண்டிப்பாய் வேண்டும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக