நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 15 பிப்ரவரி, 2012

உன் பார்வை படும் 
இடங்களாய் பார்த்து 
என் இதயத்தை 
தொலைத்து 
வைக்கிறேன்... 
நீ கண்டெடுத்து..
"இது உன்னுடையதா"
எனும் பொழுதில்
அவசரமாய் மறுக்கிறேன்...
அது உனக்கானது..
நான் தொலைத்திருந்தாலும்..
சிலகாலம்
என்னுடனிருந்த
உனக்கானது..
எப்படி சொல்ல
என்னுடையதென..???

2 கருத்துகள்:

கருத்துரையிடுக