நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 11 பிப்ரவரி, 2012

காதல் என்பது..
************
* சமாதானத்திற்கான யுத்தம்...
யுத்தத்திற்கான சமாதானம்.

* வெயிலில் குளிர்..
குளிரில் வெயில்..


* பகலில் இரவு..
நள்ளிரவில் ஒரு சூரிய உதயம்..


*மோட்டுவளையில் 70mm படம் ஓட வைப்பது..

*கூட இருந்த மணித்துளிகளை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து அனுபவிப்பது...

* கனவுகளின் கர்ப்பம்..
கவிதைகளின் பிரசவம்..


*விலக விலக நெருங்குவது..
நெருங்கி வந்தால் உருகுவது..


* எப்படியும் முழுதாய் சொல்லவிட
ஏதாவது மொழியில் ஒற்றை வார்த்தைக்கு தவிப்பது..


*நிரப்ப முடியாமல் முயன்று கொண்டிருக்கும் வெற்றிடம்..

*பிரபஞ்சத்தை இடம் மாற்றி வைப்பது..

* சொர்க்கத்திற்குள் நரகம்..
நரகத்தின் உள்ளேயே சொர்க்கம்..



*கற்றுக்கொண்டதைஎல்லாம் மறக்கச்செய்வது..
தெரியாததையும் கற்றுக்கொடுப்பது..


* மரணம் வெல்லும் எளிய வழி...

*உடைந்த கண்ணாடி வளையல்களை பொக்கிஷமாக்கி.. பூர்வீக சொத்துக்களையும்துச்சமாக்குவது..

* கனவில் ஒரு வாழ்க்கை..
வாழ்க்கையில் ஒரு கனவு..



* சுகத்தில் ஒரு வலி..வலியில் ஒரு சுகம்...

*பக்கத்து வீட்டை வேறு கிரகத்திற்கு கடத்தி விட்டு
பிரபஞ்சத்தை சுருக்குவது..

2 கருத்துகள்:

சூழ்நிலை கைதி சொன்னது…

காதல் என்பது செந்திலின் கவிதை .........

Unknown சொன்னது…

நன்றி சூழ்நிலை கைதி திரு குபேந்திரன் அவர்களே...

கருத்துரையிடுக