நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012


நானொரு   நாட்டுப்புற  ரசிகன்... !!

நானொரு
நாட்டுப்புற
ரசிகன்...
ஓவியம் வரைகையில்
தடுக்கி கொட்டி விட்ட
வர்ணங்களை
தூரிகையால்
கலைத்து விட்டிருக்கும்
நவீன ஓவியங்கள்
எனக்கு புரியாது...

ஆண் பெண் குறிகளையும்
புணர்தலையும்
நேரடியாய் சொல்லிவிட்டு
இலக்கியமென
சூளுரைக்கும்
நவீன கவிதைகள்
எனக்கு புரிவதில்லை...

இதனைப்பார்த்து
இலக்கிய வியாதிகள்
நகைக்கக்கூடும்...
நகைக்கட்டுமே...
புரியாததை புரிவதாய்
என்னை நானே ஏமாற்றி
கைதட்டுவதை விட
நானொரு
நாட்டுப்புற ரசிகனாகவே
இருந்து விட்டு
போகிறேன்...
எனக்கான கவிதைகள்
எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கும்...
வானம்..
நிலா...
காற்று..
கடல்...
குதிரை என்று...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக