ஆண்டாண்டு காலமாய்
எதையோ உரத்து
சொல்லிக்கொண்டிருக்கிறது
தனிமையில் கூவும் அக்கா குருவி..
கருவான நாள் முதலாய்
எதையோ சொல்ல
ஓடி வந்து ஓடி வந்து
திரும்பி போகிறது கடல் அலைகள்..
சிலமுறை சுனாமியாய் வந்து
சூளுரைத்துப்போனதும்
சில பல பினாமிகளின்
காதுகளில் ஏறவே இல்லை..
நேற்று வந்த தானேயும்..
நாளை வரப்போகும்
எதுவாகவும்
காற்று கற்றுத்தரும் பாடத்தை
நாம் விளங்கத்தயாரில்லை...
இந்த நச்சுக்காற்றிலிருந்து
நல்ல காற்றை
பிரித்தெடுக்கத்தரியாமல்
சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நாளை அக்கா குருவியும்
மரித்துப்போகும்..
எப்படி சொன்னாலும்
புரிந்துகொள்ளாத
யாரும் தேவையில்லையென
சமுத்திரம் ஒருநாள் சப்தமிடும்..
அதனை கேட்க
எந்த உயிருமில்லாமல் போகும்..!!!
எதையோ உரத்து
சொல்லிக்கொண்டிருக்கிறது
தனிமையில் கூவும் அக்கா குருவி..
கருவான நாள் முதலாய்
எதையோ சொல்ல
ஓடி வந்து ஓடி வந்து
திரும்பி போகிறது கடல் அலைகள்..
சிலமுறை சுனாமியாய் வந்து
சூளுரைத்துப்போனதும்
சில பல பினாமிகளின்
காதுகளில் ஏறவே இல்லை..
நேற்று வந்த தானேயும்..
நாளை வரப்போகும்
எதுவாகவும்
காற்று கற்றுத்தரும் பாடத்தை
நாம் விளங்கத்தயாரில்லை...
இந்த நச்சுக்காற்றிலிருந்து
நல்ல காற்றை
பிரித்தெடுக்கத்தரியாமல்
சொல்ல வந்ததை
சொல்ல முடியாமல்
நாளை அக்கா குருவியும்
மரித்துப்போகும்..
எப்படி சொன்னாலும்
புரிந்துகொள்ளாத
யாரும் தேவையில்லையென
சமுத்திரம் ஒருநாள் சப்தமிடும்..
அதனை கேட்க
எந்த உயிருமில்லாமல் போகும்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக