நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

வருத்தப்படுகிறாள் அம்மு...
"நீங்க நிறைய எழுதிட்ரீங்கபா....
எனக்கு தான் சொல்ல கூட தெரியல..."
அடி மண்டு.. எனக்காக சாப்பிடாம இருக்கியே..
இத விட எப்படி சொல்ல முடியும்..?
பின்கூந்தலில் விரல்கள் அலைய
சமாதானம் சொல்கிறேன்..
இதழ்களில் முத்தமிட்டு மார்பில் முகம் புதைக்கிறாய்..
இப்போது எனக்கு வருத்தம்..
இப்படி எளிதாய் சொல்லிவிடும் நேர்த்தி
எனக்கு ஏன் வாய்க்கவில்லை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக