நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

அவசரமாய் பேருந்தில் தொற்றுகிறாய்...
"முன்னாடியே வந்து நிக்கறதில்லையா."
ஒரு கை பாதுகாப்பாய் பிடிக்குமே......அது...

மழையில் நனைந்து வீடு திரும்புகிறாய்..
எங்காவது நின்னுட்டு மழை விட்ட பிறகு வந்திருக்கலாம்ல..
கையில் துண்டுடன் ஒரு கை தயாராய் இருக்குமே.. அது..

சாப்பிடும் போது புரைக்கேறினால்..
தலையில் தட்டி தண்ணீர் நீட்டுமே ஒரு கை.. அது..

தூக்கம் வராமல்
புரண்டு கொண்டிருக்கும் இரவுகளில்
தலை கோதி கால் பிடித்து தூங்கச்செய்யுமே ஒரு கை.. அது..

எல்லா கைகளுக்கும் ஒரு உருவம் கொடுத்துப்பார்...
அப்போது புரியும்.. அது கை அல்ல.. என் காதல் என்று...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக