நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012


என் கவிதையின் முதல் வரியும் காதலின் கடைசி வரியும்..

நான் எழுதத்தொடங்கிய
காதல் கவிதைக்கான முதல் வரி..
உன்னிடமிருந்த்து தான்
கண்டெடுக்கப்பட்டிருக்கிறது...
உதடு சுழித்த
உன் புன்னகையிலிருந்தோ..
உன் செல்லக் கோபத்திலிருந்தோ....
என் அன்பில் நீ
உருகி உதிர்த்த கண்ணீரிலிருந்தோ..
ஆனால் கடைசி வரி..
என்னிடம்தானிருக்கிறது..
அது நான் உன்னைப்பிரியும் மரணம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக