நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஒரு நீண்ட...கடவுள் மறுப்பு 
பிரசங்கத்திற்கு பிறகு.. 
ஏழு மைல் இருட்டில் 
பாட்டுகூட பாடாமல் 
சைக்கிளில் வந்து 
கட்டிலில் கால் நீட்டுகையில்
அனிச்சையாய் வாய் முனுமுனுக்கிறது.
" ஆண்டவனே.. அய்யனாரப்பா.."
அய்யனாருக்கும் எனக்குமான
உறவை தவிர்ப்பது அத்தனை எளிதல்ல...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக