நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 31 ஜனவரி, 2012

காற்று போன பலூனாய்.. 
வரிகளோடு வற்றிப்போயிருக்கிறது வயிறு.. 
அபிக்கான உணவுதாங்கி 
வலி ஏற்று காத்திருக்கிறது தனங்கள்.. 
உணவு மறுக்கப்பட்டு 
உலர்ந்து வெடித்திருக்கிறது உதடுகள்..
நீர் தாங்கிய குளங்களாய்
ஏதோ சொல்லத்துடிக்கிறது கண்கள்..
மடியில் தலை தாங்கி தாயாகிறேன் நான்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக