நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

என் அஸ்வமேதயாக குதிரை 
உன் வீட்டு கொட்டடியில் 
உறங்கி கிடக்கிறது.. 
மீட்டுச்செல்ல வந்த என்னையும் 
கண்களால் 
கைது செய்திருக்கிறாய்.. 
ஆனால்...
ஆள்வதற்கு 
எனக்கு இப்போதுதான் 
புதிய ராஜ்ஜியம் கிடைத்திருக்கிறது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக