நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தனிமையில் நெஞ்சு விம்மி 
கண்ணீராய் வெளிப்படும் 
மௌன அழுகைகள்... 
சாய்ந்து கொள்ளும் உரிமையுடைய 
தோளை பார்த்த உடன் 
வெடித்து சிதறுகிறது....
முதுகு குலுங்கும் 
பேரழுகையாய்..!!!

ஒவ்வொரு சோக நிகழ்விலும் 
யாரோ ஒருவர் 
கண்ணீர் அடக்கி காத்திருக்கிறார்.. 
சாய்த்துகொள்ளும் 
தோள் வரும் வரையில்... 
வெடித்து அழுவதற்கு..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக