நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஒரு சிறிய ஊடலில் 
ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது 
நம் பந்தம்..
உன்னை நேரிட்டு பார்ப்பதில்லை.. 
உன்னோடு பேசுவதில்லை.. 
ஆனாலும் நீ வருவாய் என்ற 
நம்பிக்கையும் ....
என்னை உணர்கிறாய் என்ற 
எண்ணத்திலும் சிலிர்கிறது மனசு.. 
என்னை கவனிக்கிறாய் என்பதிலும் 
நான் உன்னை கவனிப்பதை 
உனக்கு  உணர்த்துவதிலும் 
கூடுதல் சிரத்தை எடுக்கிறது மனசு..
உனக்கும் தானே???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக