நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

வாதச்சமரில் 
சொல்லம்புகளால் 
குருதி கசியா ரணமேற்படுத்தி விட்டேன்.. 
நீர்த்துளி தெறிக்கும் விழி ஜன்னலில் 
உன் வலியுணர்கிறேன்.. 
கண்ணுக்கு தெரியாத
காயங்களில்
அன்பெனும் மருந்தை
இதழ்களில் எடுத்து
இதழ்களில் பூசுகிறேன்..
என்னை விட்டு விலக இயலா
பாசக் கயிறு
பிணைக்கிறது நம்மை..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக