நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 29 ஆகஸ்ட், 2012

விளக்கை அணைப்பதற்காக 
வாயிலில் காத்து நிற்கிறது 
தீர்ந்து விடும் இரவுகளும் 
தீரா கனவும்.. 
விளக்கை அணைத்துவிட்டு, 
என்னை அவைகளுக்காக 
படுக்கையில் கிடத்திவிட்டு 
வெளியேறுகிறேன்.. 
உன்னிடம் பேச 
இன்று நிறைய இருக்கிறது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக