நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 29 மார்ச், 2012

எதிர்பாராமல் 
திரண்ட மேகங்கள்.. 
கொட்டித்தீர்த்தன 
கோடை மழை... 
கப்பல் செய்யும் 
காகிதம் தேடும் அபிக்கு.. 
எதைக்கொடுப்பது... 
என்னிடமிருக்கும் 
எல்லா புத்தகங்களும் 
யாரோ ஒருவரின் அனுபவமோ.. 
ஆசைகளோ.. 
கனவுகளோ.. 
ஏக்கங்களோ... 
யாருடைய கனவை 
நான் கலைக்க..?? 
இறுதியாய் கிடைத்தது 
அந்த பழைய டைரி... 
அது.... 
நான் என் மனைவிக்காக 
எழுதிய காதல் கவிதைகள்... 
போன முறை மழைக்கு 
அபி சில கப்பல்கள் செய்தாள்.. 
அம்மு கொடுத்த 
அந்த காகிதங்கள் 
நான் "அவளு"க்கெழுதிய
காதல் கடிதங்களாய் கூட 
இருக்கும் வாய்ப்பிருக்கிறது...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக