நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

செவ்வாய், 13 மார்ச், 2012

நீ பெண்ணென்றும் 
நான் ஆணென்றும் 
அறியாத வயதில் 
கண்ணா மூச்சி 
ஆடினோம்... 
என்னால்
கண்டு பிடிக்க
இயலவில்லை என்று
நீயே வெளியில் வந்து
நீ இருக்குமிடம்
தெரிய வைத்தாய்...
அந்த ஆட்டம்
அப்போதே முடிந்தது...
எல்லாம் உணர்ந்த
இந்த வயதில்
உன்னை நீயே
ஒளித்துவைத்துக்
கொண்டிருக்கிறாய் ...
கண்டு பிடித்த பின்னும்
காட்டிக்கொள்ளாமல்
நானிருக்கிறேன்...
வெளியில்
வரக்கூடாதென நீ
அடம் பிடிக்கிறாய்...
இந்த கண்ணாமூச்சி
எப்போது முடியும்..???
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக