நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 12 மார்ச், 2012

என்ன பாவம் செய்தோம் நாங்கள்...

எல்லா பொருளுக்கும் 
"இன்ஸ்டன்ட் கேஷ்"
வாழ்க்கை மட்டும் 
"இயர்லி இன்ஸ்டால்மென்டில்"..

காயடிக்கப்பட்ட
காளைமாடு
எங்களை விட
இன்னும் ஒரு படி மேல்...

எங்களுக்கான பாலை
ஏன் எந்த கள்ளிச்செடியும்
சுரக்காமல் போனது...??

எங்களுக்கான
ஒற்றை நெல் மணி
ஏன் எந்த பயிரிலும்
விளையாமல் போனது..??

"அடுத்தொரு பொறப்பிருந்தா
பொண்ணாக பொறந்து வாடா...
போதாத காலமிது..
போய்வாடா சின்னத்தம்பி.."
என்று பாட
ஏன் எந்த கருத்தம்மா கிழவியும்
எங்களுக்கு மட்டும்
இல்லாமல் போனாள்..??

ஐந்து நிமிடம்
அதிகமாகவோ
குறைவாகவோ காட்டியதற்காக
எந்த கடிகாரமும்
தண்டிக்கப்படுவதில்லை..
ஆனால்...
எங்கள் துயிலெழுகை
ஐந்து நிமிடம் தாமதமானால்
காலைக்கடன்களில்
ஏதாவதொன்றிற்கு
வட்டிமட்டுமே கட்ட இயலும்..

ஏ... நான் பிறந்த
மானம்கெட்ட
மனித சமுதாயமே...
கரன்சிகளின்
மை வாசனைக்கும்..
கழுத்தில் தொங்கும்
உலோகத்தங்கத்திற்கும்
வலிதெரிவதில்லை....
இரத்தம் சொட்டும்
எங்கள் வலி
ஏன் உனக்கு புரியவில்லை..???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக