நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வியாழன், 22 மார்ச், 2012

காவிரி தண்ணீரும் 
கரண்டும் 
எங்களை விட்டு விலக விலக... 
எங்களூர் பிள்ளைகள் 
இஞ்சினியர்களாய்... 
அவதாரம் எடுக்க எடுக்க...
எங்கள் வீடுகளில்
நெல்மணிகள்
எங்களுக்கே
அதிசயமாகிப்போனது....
வெள்ளைக்காலர் சட்டை சம்பளம்
எங்கள் கைகளில்
அலை பேசியாகவும்..
எங்கள் கால்களுக்கிடையில்
பெட்ரோல் வாகனங்காகவும் சேரச்சேர
நெல்மணிகளுக்காக
குறுக்கிலும் நெடுக்கிலும் பறந்து..
எங்கள் கொட்டகையில்
கூடுகட்டி இருந்த
சிட்டுக்குருவிகளும்
அருங்காட்சியகத்திற்கு போயிருக்கிறது....
இதற்கெதிராய் தீர்மானம் கொண்டுவர
எந்த கழுகிற்கும் தெரியவில்லை...
அப்படியே கொண்டு வந்தாலும்
யாரும் அதை
ஆதரிக்கப்போவதும் இல்லை...
செத்துப்போனது சிட்டுக்குருவிதானே...??
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக