நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

வெள்ளி, 16 மார்ச், 2012


எந்த வீட்டு விசேஷத்திலும்
பந்தியில் வைக்கும்
மைசூர் பாகோ...
ஜாங்கிரியோ..
உன் முந்தானைக்கும்
இடம் பெயரும்...
எம்புள்ள போன உடனே
கைய பாக்குமென
யாருக்கும் தெரியாமல்
உதடுகள் முனுமுனுக்கும்...
அவையத்து முந்தி இருந்தாயோ
இல்லையோ.. ..
உன் பிள்ளை
சான்றோன் என கேட்க
நான் என்ன செய்ய போகிறேன்..???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக