நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 26 செப்டம்பர், 2012

விஸ்வாமித்திரன் 
தவமிருக்கிறான்... 
மேனகை வேண்டி...!!!
காதல் சுகமானது..!!!

விலக விலக என்னுள் நீ 
விஸ்வரூபமெடுக்கிறாய்.. 
நெருங்க நெருங்க 
உன்னுள் நான் 
தொலைந்து போகிறேன்..!!!

நீயா நானா என்ற போராட்டம் 
நிறையபேரை பிரிக்கிறது.. 
ஆனால் நம்மை மட்டும் 
நெருக்கி பிணைக்கிறது... 
ஆம்... 
யார் அதிகமாய் காதலிப்பது.. 
நீயா நானா என்ற போராட்டம்..!!!


நீ என்னை 
அணைத்துக்கொண்டது என்னவோ 
நிமிடங்களில் தான்... 
ஆனால் அந்த நினைவுகள் 
என் ஆயுளை வருடங்களாய் நீட்டிக்கிறது...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக