நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 12 செப்டம்பர், 2012


துண்டு துண்டாய் ஒரு வானம்..

மல்லிகை வாசம் 
கிளர்ச்சி ஏற்படுத்தும் 
படித்து தெரிந்தது.... 
ரோஜாவாசம் 
கிளர்ச்சி ஏற்படுத்துகிறது.... 
பட்டு தெரிந்தது... 
காரணம் ...நீ..!!!

துண்டு துண்டாய் ஒரு வானம்..
"செல்லம்...
செல்லம்..."
சீரான இடைவெளியில் 
நான் அழைக்கும் போதே 
தெரியுமுனக்கு..
நான் என்ன சொல்ல போகிறேனென்று...
"I LOVE YOU DA .."
"ம்..."

I LOVE YOU TOO
பதினோர் எழுத்து பதிலை
ஒற்றை எழுத்தாய்
சுருக்குகிராய்..
வார்த்தைகளை
எழுத்துக்குள்ளும் ..

என்னை உனக்குள்ளும்
அடக்குவதில் சுகம் உனக்கு..
அடங்குவதில் சுகம்
எங்களுக்கு..

துண்டு துண்டாய் ஒரு வானம்..

உப்புக்காற்றில் ஊடுருவி 
காதுநுழைந்து ..
உயிருக்குள் 
ஊர்வலம் நடத்துகிறாய் நீ... 
நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.... 
உனக்கு முன்னால்  நானும்.. 
எனக்கு முன்னால் நீயுமர்ந்து 
பரஸ்பரம் ரசித்துக்கொண்டிருக்கிறோம்.. 
வார்த்தைகளற்று மௌனமாய்...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக