நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 5 செப்டம்பர், 2012

காகிதம் 
காற்றில் பறந்து ஓடுகிறது.. 
பேனாவில் 
மை தீர்ந்து பல்லிளிக்கிறது.. 
பென்சில் முனை 
உடைந்து சிதறுகிறது.. 
ஆனாலும் எழுதுவோம்.. 
எழுதுகோலாய் எம் விரல்கள்.. 
காகிதமாய் பூமிப்பரப்பு.. 
இடையில் நிறுத்த 
இரண்டே காரணங்கள்தான் வேண்டும்..
ஒன்று எம் விரல்கள் ஓய வேண்டும்..
இல்லை
பூமி சுற்றுவதை நிறுத்தவேண்டும்!!!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக