நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 5 செப்டம்பர், 2012

பட்டாம்பூச்சியை 
அலகிடை கவ்வி 
சாரளத்தின் வழி நுழைந்து 
கீற்றுக்குடிசையின் 
மோட்டிலிருந்து தொங்கும் 
கயிற்றில் கட்டிய சிறு கூடுநோக்கி 
விர்ர்ரென சிறகடிக்கும் 
சிட்டுக்குருவியாய் 
பறந்து வருகிறது மனசு.. 
உன்னை பார்த்த சந்தோஷத்தில்..

வேகமாய் கடந்து சென்ற
வாகனமேற்படுத்தும்
வெற்றிடம் நிரப்ப
காற்றோடு சேர்ந்து
ஓடிவரும்
குப்பைகளாய்
கூடவே காமமும்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக