தவற விட்ட அழைப்புகள்
ஒவ்வொரு நேரத்திற்கும்
ஒவ்வொரு கேள்வியை சுமந்து வருகின்றன..
விடிகாலையில் ..
"இன்னும் தூங்குறீங்களா.."
உச்சி வெயிலில் " சாப்டீங்களா..? "
மாலை பொழுதில்..
"ரூம்க்கு போயாச்சா..."
ஊரடங்கும் வேளையில் ...
"தூக்கம் வரலடா.."
தவறவிட்ட அழைப்புகள்
தாங்கி வரும்
ஒவ்வொரு கேள்விக்கும்
அதே தவறவிட சொல்லிக்கொடுக்கப்பட்ட
அழைப்புகளாலேயே
பதிலும் சொல்ல பழகி இருக்கிறோம்..
மிஸ்டு கால்களால்
மிஸ்ஸான வாழ்க்கையை
வாழ்ந்து விடும் வெறி
கண்களில் நிலழாட
தூங்கிப்போகிறோம்..
விடியட்டும்,...
இன்னொரு மிஸ்டு கால் வரும்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக