நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

புதன், 21 நவம்பர், 2012

நான் அமைதியாயிருக்கும் 
நேரங்களில் 
நீ பாத்திரங்களை உருட்டுவது 
நீ கொண்டு வரும் 
கவன ஈர்ப்பு தீர்மானம்... 
சண்டையிடும் உரிமைதானடி 
உனக்கிருக்கிறது என்று 
நீ பேசாதிருக்கும் நேரங்களில் 
உன் காது மடல் கவ்வுவது 
நான் கொண்டு வரும் 
உரிமை மீறல் தீர்மானம்... 
காதலரசில் நாடாளுமன்றம்
தினம் தினம் கூடிக்கலைகிறது..
ஏதாவதொரு தீர்மானத்தை
முன்மொழிந்த படி..!!!

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... ரசிக்க வைத்தது...

தீர்மானங்கள் தொடர வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

ரசனையின் உச்சகட்டம்

கருத்துரையிடுக