மலராத மொட்டுக்களை
உன் கூந்தலில்
சூடுகிறேன்..
உதடுகளால் பூக்கிறாய்..
உதிராத மல்லிகையாய்..!!!
*****************
உன் புன்னகையை புரிந்துகொள்ளும்
பருவம் வந்தபின்
தீபாவளி மத்தாப்புகள் எனக்கு
திகட்டிவிட்டன..!!!
*****************
செடியிலிருந்து
கிள்ளி எடுத்தபோதும்
வருத்தப்படாத மலர்கள்
கதறி அழுகின்றன..
உன் கூந்தலில் இருந்து
உதிர்ந்த போது..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக