நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 5 நவம்பர், 2012


மலராத மொட்டுக்களை 
உன் கூந்தலில் 
சூடுகிறேன்.. 
உதடுகளால் பூக்கிறாய்.. 
உதிராத மல்லிகையாய்..!!!
*****************
உன் புன்னகையை புரிந்துகொள்ளும் 
பருவம் வந்தபின் 
தீபாவளி மத்தாப்புகள் எனக்கு  
திகட்டிவிட்டன..!!!
*****************
செடியிலிருந்து 
கிள்ளி எடுத்தபோதும் 
வருத்தப்படாத மலர்கள் 
கதறி அழுகின்றன.. 
உன் கூந்தலில் இருந்து 
உதிர்ந்த போது..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக