நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 14 ஆகஸ்ட், 2017



Image may contain: sky, beach, outdoor and nature


உன் இதழ் சுவைத்த
தேவ வினாடிகளில்தான்
என் மரணம் நோக்கிய பயணப்பாதை
எல்லையற்று நீளத்தொடங்கியது.....


தேடல்களுடன்
நகர்ந்துகொண்டிருகிறேன்...
காற்று கவிதை எழுதி வைத்திருக்கும் 
பாலைவனப்பரப்பாய்...
நிறைந்திருகிறது உன் நினைவுகள்..!!

ஒட்டகப்பாதங்கள் இரட்டை வரிசை புள்ளிகளை 
வெகுநேர்த்தியாய்
வைத்துக் கொண்டிருகின்றன ..
குழிகளில் துகள்களாய் நிறைகிறது 
உன் நினைவுகள்...
மீண்டும் ஒரு புதிய கவிதை...
இப்போது இன்னுமழகாய்...!!

இழுத்துக்கட்டிய ரப்பர் வளையத்துக்குள்
அடங்க மறுக்கும் உன் நெளி முடிகளை போலவே 
வெகுண்டெழுகிறது
மர்மக்கனவு...
இரவு முடியாதிருக்கட்டும்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக