நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

திங்கள், 5 நவம்பர், 2012

உன் உதடுகளை பார்த்திருந்தால் 
வள்ளுவனே குழம்பி இருப்பான்... 

நீ உதடு சுழிக்கையில்..
முதல் வரியில் 
மூன்று வார்த்தைகளும் 
இரண்டாம் வரியில் 
நான்கு வார்த்தைக்களுமாய்.. 

நீ முத்தமிட உதடு குவிக்கையில் 
இரண்டு வரிகளிலும்
இரண்டு வார்த்தைகள் மட்டுமாய்...

நீ புன்னகைக்கையில்
இரண்டு வரிகளும்
நான்கு வார்த்தைகளாய்...

ஆமாம் ஆமாம்
நிச்சயம் குழம்பித்தான் போயிருப்பான்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக