நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

சனி, 10 நவம்பர், 2012

ஒரே ஒரு 
வெளிச்ச புள்ளியாவது 
தெரியாதா என 
ஏங்கி காத்திருக்கும் 
இரவுகளில் 
சூரியனாய் வந்து விடுகிறாய் நீ.. 

நினைவுகளில் மட்டும்..!!!

ஒரு மழைத்துளிக்காக 
காத்திருக்கும் வேளையில்
ஒரு பேரருவியாய்
வந்து விழுகிறாய் நீ...

நினைவுகளில் மட்டும்..!!!

ஒரு சில்லறை சத்தத்திற்காக
தட்டேந்தி
காத்திருக்கும் நேரங்களில்
ஒரு புதையலாய்
வந்துவிடுகிறாய் நீ..

நினைவுகளில் மட்டும்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக