நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.... நமை சேர்த்த கவிதைக்கொரு நன்றி...!!!

ஞாயிறு, 20 மே, 2012

கனவில் வந்தேனேன்றாய்..
நம்பவில்லை நான்..
அதே நாள் 
அதே நேரம் 
என்னுடனிருந்தாய் நீ .. 
பிறகெப்படி நான் அங்கு வந்தேன்..
குழப்பத்தினூடே பிரிகிறோம்..
ஏனடி நேற்று பொய் சொன்னாய்..
என்ன பொய்..
உன் கனவில் நான் வந்ததாய்..
ஓ.. நான் வந்தது அவளுக்கு தெரியாது..
என்ன குழப்புகிறாய்..
அவள் என்னை
மறைந்திருக்கச்சொன்னாள்..
தெரியாமல்தான் நான் வந்தேன்..
எனக்கு இப்பொது புரிகிறது..
வந்திருப்பது நீ அல்ல..
உன் காதல் என்று..
ஆமாம்....
நேற்று என்னோடு சரியாய் பேசவில்லையே..
இன்னுமா புரியவில்லை..
எனக்கு தெரியாமல்
அது உன்னை தேடித்தான்
அங்கு போயிருக்கும்..
மார்பில் முகம் புதைக்கிறாய்..
சுருக்கென்ற வலியுடன்
உன் இதழிடை
பற்களிலிருந்து முளைக்கிறது
ஒற்றை முடி...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக